மத்துகமவில் விசேட பரீட்சை மண்டபங்கள் ஸ்தாபிப்பு

மத்துகமவில் உயர்தர பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை மண்டபங்கள் 

by Staff Writer 19-10-2020 | 4:01 PM
Colombo (News 1st) மத்துகம பகுதியில் தனிமைப்படுத்த 03 பொலிஸ் பிரிவுகளிலிருந்து கபொத உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், குறித்த பரீட்சார்த்திகள் தற்போது பரீட்சை எழுதும் மண்டபங்களில் விசேட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்துகம வலயக்கல்வி பணிப்பாளர் லால் திசாநாயக்க தெரிவித்துள்ளார். மத்துகம பிரதேச ச​பைக்குட்பட்ட ஒவிடிகல, பதுகம, பதுகம புதிய குடியேற்றம் ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நேற்று (18) அறிவிக்கப்பட்டன. குறித்த பகுதிகளில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்துகம வலயக்கல்வி பணிப்பாளர் லால் திசாநாயக்க கூறியுள்ளார்.