by Staff Writer 19-10-2020 | 7:18 PM
Colombo (News 1st) கலேவெல - ரன்மெட்டியாவ பகுதியில் நீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
07 வயது சிறுவன், 12 மற்றும் 15 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று (19) காலை குளிக்கச் சென்ற போது இவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
உயிரிழந்த சிறார்களின் சடலங்கள் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.