by Staff Writer 18-10-2020 | 6:49 PM
Colombo (News 1st) மத்துகம பொலிஸ் பிராந்தியத்தில் சில கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவிடிகல, பதுகம, பதுகம புதிய குடியேற்றம் ஆகிய கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது