மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு தொற்று

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 73 பேருக்கு தொற்று

by Staff Writer 17-10-2020 | 5:29 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 73 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் மற்றும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய 71 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 1,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,427 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 2, 019 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3395 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.