தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம்

COVID-19 கட்டுப்பாடு தொடர்பில் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 16-10-2020 | 9:02 PM
Colombo (News 1st) COVID-19 இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதில் உள்ள பாரதூரத்தன்மை தொடர்பில் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. COVID-19 முதலாம் அலையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமை தொடர்பில், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு கிடைத்த நற்பெயரும் கௌரவமும் சில விடயங்கள் காரணமாக இல்லாது போவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தில் தற்போது கலந்துரையாடப்படும் அவ்வாறான விடயங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்யுமாறு, தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சிலரின் நாசகார செயற்பாடுகள் அல்லது, அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் தொடர்பில் ஈடுபட்டிருந்தால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நவடிக்கை எடுக்குமாறும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.