20 ஆவது திருத்தம்: எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்

by Staff Writer 16-10-2020 | 3:51 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது. இந்த இரு நாட்களிலும் காலை 10 மணி தொடக்கம் இரவு 7.30 வரை விவாதம் இடம்பெறும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார். 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மூன்று நாட்கள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எனினும், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.