ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 16-10-2020 | 6:13 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர். ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கொழும்பு -07, பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டை இன்று சோதனைக்குட்படுத்திய பின்னர் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான செயற்பாடுகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.