மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு தொற்று

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 16-10-2020 | 4:34 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், ஏனைய 58 பேரும் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1850 ஆக அதிகரித்துள்ளது. மினுவங்கொட கொத்தணியில் நேற்று மாத்திரம் 68 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டவர்களாவர். ஏனைய 46 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் பழகியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 06 பேர் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகினர். அவர்களில் இருவர் வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய கடற்படையை சேர்ந்தவர்களாவர். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த மூவரும் அவர்களில் அடங்குகின்றனர்.