மின்தூக்கி அறுந்து வீழ்ந்து இருவர் உயிரிழப்பு

கண்டியில் மின்தூக்கி அறுந்து வீழ்ந்து இருவர் உயிரிழப்பு

by Staff Writer 16-10-2020 | 4:15 PM
Colombo (News 1st) கண்டி - லெவெல்ல பகுதியில் மின்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டடத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற மின்தூக்கியொன்றின் கேபிள் அறுந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இதன்போது, சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 35 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பலத்த காயமடைந்த மற்றுமொருவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.