சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

அரியாலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 16-10-2020 | 4:40 PM
Colombo (News 1st) யாழ் - அரியாலை, உதயபுரம் பகுதியில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதி இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, உழவு இயந்திரத்துடன் தப்பிச்செல்ல முற்பட்ட குறித்த நபர் சுவருடன் மோதியதில், சுவர் இடிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அரியாலையைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.