சீருடை துணி டிசம்பர் 31 இற்கு முன்னர்...

மாணவர்களுக்கான சீருடை துணியை டிசம்பர் 31 இற்கு முன்னர் வழங்க திட்டம்  

by Staff Writer 15-10-2020 | 8:15 AM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை பாடசாலை சீருடை துணிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளது.