நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கும் திட்டம் இல்லை - அஜித் ரோஹண 

by Staff Writer 15-10-2020 | 12:48 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவு உள்ளடங்களாக 19 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.