இணைப்பு செயலாளர்களாக கருணா, செந்தில் நியமனம்

பிரதமரின் இணைப்பு செயலாளர்களாக விநாயகமூர்த்தி முரளிதரன், செந்தில் தொண்டமான் நியமனம்

by Staff Writer 14-10-2020 | 6:29 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இணைப்பு செயலாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராக விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன. இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (13) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டதாக அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதேவேளை, செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்திற்கான பிரதமரின் இணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.