கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 14-10-2020 | 6:52 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை (15) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலய ஊழியர்கள் தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து பணிக்கு சமூகமளிக்க முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுவரை 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.