கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தல்

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் 

by Staff Writer 14-10-2020 | 9:02 AM
Colombo (News 1st) நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால், நாளை (15) காலை வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மலையக பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த காற்றுடன் மழை பெய்கின்றது. நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை, தலவாக்கலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதுடன் சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்