பெங்களுரு அணி 5 ஆவது வெற்றியை பதிவு செய்தது

IPL: பெங்களுரு அணி 5 ஆவது வெற்றியை பதிவு செய்தது

by Staff Writer 13-10-2020 | 7:40 AM
Colombo (News 1st) IPL கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களுரு அணி 5 ஆவது வெற்றியை பதிவு செய்தது. சார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடஸ் அணி, பெங்களுரு ரோயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது நாணய சுழற்சியில் நடைபெற்ற பெங்களுரு அணியின் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களுரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை குவித்தது. இறுதி 5 ஓவர்களில் 83 ஓட்டங்கள் திரட்டப்பட்டன. 195 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களையே எடுத்தது. இதனால், பெங்களுரு அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.