செல்வம் அடைக்கலநாதன் - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

செல்வம் அடைக்கலநாதன் - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

by Staff Writer 13-10-2020 | 5:52 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (12) இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் 20 ஆம் திருத்தம் தொடர்பிலோ அல்லது 13 ஆம் திருத்தம் தொடர்பிலோ கலந்துரையாடப்படவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வன்னியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.