by Staff Writer 13-10-2020 | 4:48 PM
Colombo (News 1st) ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வெருகல் - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நாளை (14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.