English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Oct, 2020 | 8:45 am
Colombo (News 1st) செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் பட்சத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் விரைவில் அறிவிக்கவுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான செயன்முறை பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்று காரணமாக சில மாவட்டங்களில் குறித்த செயன்முறை பரீட்சைகளுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன தெரிவித்தார்.
இதனால் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலைமைகளை கருத்திற் கொண்டு, தகுந்த நடைமுறைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS