தாய்லாந்தில் ரயிலுடன் மோதியது பஸ்: 18 பேர் பலி

தாய்லாந்தில் பஸ்ஸொன்று ரயிலுடன் மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 11-10-2020 | 3:06 PM
Colombo (News 1st) தாய்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பெங்கொக்கின் கிழக்கு பகுதியிலே பஸ் ஒன்று ரயிலொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக்கூடுமென அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.