கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

by Staff Writer 11-10-2020 | 5:14 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த காற்று வீசுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென கடற்றொழில் திணைக்களத்தின் சோதனை நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார். இதனால், இந்த கடற்பிராந்தியங்களை பயன்படுத்தும் சிறு மற்றும் ஒரு நாள் மீன்பிடியாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். மேலும், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நீண்ட நாள் படகுகளில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் ஆழ்கடல் பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீனவர்களும் கடற்றொழிலாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கடற்றொழில் திணைக்களத்தின் சோதனை நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா கேட்டுக் கொண்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்