by Staff Writer 10-10-2020 | 4:18 PM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 514 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஏனைய தரங்களைச் சேர்ந்த 14,140 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
71 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலும் அநுராதபுரம் ஜயஶ்ரீ மகாபோதி வளாகத்திலும் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை, இராணுவத்தினருக்கு ஆசி வேண்டி இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களிலும் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்படவுள்ளன.