நீதிச்சேவை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல் 

COVID - 19 தொற்று: நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் விளக்கம் 

by Staff Writer 08-10-2020 | 8:09 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழக்குகளுக்காக, பிறிதொரு நாளை வழங்குமாறும் அந் நாட்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் அறிவித்தல் பலகையை காட்சிப்படுத்துமாறும் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஊரடங்கு சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றங்களுக்கு மீளவும் செல்ல முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.