வௌிநாடுகளில் 67 இலங்கையர்கள் கொரோனா தொற்றால் பலி

வௌிநாடுகளில் 67 இலங்கையர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு 

by Staff Writer 08-10-2020 | 7:04 AM
Colombo (News 1st) வௌிநாடுகளில் தொழில் புரியும் 67 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமான் உள்ளிட்ட 17 நாடுகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். அவர்களுக்கான இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். வௌிநாடுகளில் தொழில் புரியும் 2,600 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.