மீனவர்கள்,  கடல்சார் தொழிலாளர்களுக்கான அறிவிப்பு

மத்திய வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

by Staff Writer 08-10-2020 | 3:40 PM
Colombo (News 1st) மத்திய வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியம், வடக்கு அந்தமான் கடற்பிராந்தியம் என்பன கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் காற்றுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர்களும் கடல்சார் தொழிலாளர்களும் நாளை (09) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்