கன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்

கன்சியூலர் பிரிவின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

by Staff Writer 08-10-2020 | 10:17 AM
Colombo (News 1st) வெளிவிவகார அமைச்சின் கன்சியூலர் பிரிவின் சேவைகள் இன்று (08) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் ஒன்றுகூடுவதற்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது வௌிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் மரணங்கள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் மரணம் தொடர்பான ஆவணங்களை உறுதிப்படுத்தி அவற்றை அனுப்பி வைப்பதற்கும் மாத்திரம் நாட்களை முற்பதிவு செய்து கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்ள வௌிநபர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை Online ஊடாக மேற்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்