கத்தாரிலிருந்து 42 பேர் தாயகம் திரும்பினர்

கத்தாரிலிருந்து 42 பேர் தாயகம் திரும்பினர்

by Staff Writer 08-10-2020 | 1:27 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கத்தாரில் சிக்கியிருந்த மேலும் 42 பேர் இன்று (08) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். நாடு திரும்பியவர்களை தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக COVID - 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 164 பேர் இன்று தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தில் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 49,577 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர். 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8,029 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக COVID - 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.