Colombo (News 1st) மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 190 ஊழியர்களுக்கு இன்று (07) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த 3 நாட்களில் இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய 1,022 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4,442 ஆக அதிகரித்துள்ளது.