மினுவாங்கொடை: கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 1,033 ஆக அதிகரிப்பு

by Staff Writer 07-10-2020 | 8:11 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 1,033 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் 201 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்தோடு, தொற்றுக்குள்ளான ஊழியரை சந்தித்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 739 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், இது இலங்கையில் ஒரே நாளில் பதிவான ஆகக் கூடுதலான நோயாளர் எண்ணிக்கையாகும். மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களை சந்தித்த சுமார் 8000 பேரும் இதுவரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன், வெலிசர பிரென்டிக்ஸ் தொழில்சாலையின் ஒருவருக்கும் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,560ஆகும்.