சிகிச்சைகளை தவிர்ப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நோயாளர்களின் வீடுகளுக்கு அம்பியூலன்ஸ் சேவையை வழங்க தீர்மானம் 

by Staff Writer 07-10-2020 | 9:12 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சைகளுக்காக அழைத்து செல்வதற்கு நோயாளர்களின் வீடுகளுக்கு அம்பியூலன்ஸ் சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளான சிலர் சிகிச்சைகளுக்காக செல்வதை தவிர்ப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு, வீடுகள் வரை முன்னெடுக்கப்படவுள்ள அம்பியூலன்ஸ் சேவைகள் மூலம் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறு அமைச்சர், மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். சிகிச்சைகளை தவிர்ப்பதானது, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் என்பதால் அவ்வாறு செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் பெருமளவான கொரோனா நோயாளர்கள் பதிவாகுவதால், சுகாதார அமைச்சினால் குறித்த மாவட்டத்தில் PCR பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்