நாட்டின் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்

நாட்டின் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல் 

by Staff Writer 07-10-2020 | 7:36 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் 17 பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், கம்பஹா பிராந்தியம்  கம்பஹா கனேமுல்ல கிரிந்திவெல தொம்பே மல்வத்துஹிரிபிடிய மீரிகம நிட்டம்புவ பூகொட வேயங்கொட மினுவாங்கொடை வீரகுல வெலிவேரிய பல்லேவெல யக்கல களனி பிராந்தியம்  ஜா - எல கந்தான நீர்கொழும்பு பிராந்தியம்  திவுலப்பிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதிகளுக்குள் செல்வது, அங்கிருந்து வௌியேறுவது மற்றும் அந்தப் பகுதிகளூடாகப் பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அனைவரும் தத்தமது வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூர இடங்களுக்கான பஸ் சேவைகள், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள பகுதிகளூடாக பயணிக்க முடியும் என்ற போதிலும், குறித்த பகுதிகளில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.