தேசிய கண் வைத்தியசாலை விடுத்துள்ள விசேட அறிவிப்பு 

by Staff Writer 07-10-2020 | 12:12 PM
Colombo (News 1st) அவசர விபத்து, மாதாந்த சிகிச்சை மற்றும் அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு வைத்தியசாலை அதிகாரிகள், மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். கண் வைத்தியசாலையில் சமூக இடைவௌியுடன் சிகிச்சை வழங்குவதற்கு போதிய இடவசதி இன்மையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட கண் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள், விசேட வைத்திய நிபுணரின் கடிதத்துடன் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதை தவிர்க்குமாறும் தேசிய கண் வைத்தியசாலை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.