English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Oct, 2020 | 4:31 pm
Colombo (News 1st) இமானுவேல் சார்பென்டியர் (Emmanuelle Charpentier ), ஜெனிஃபர் A. டவுட்னா (Jennifer A. Doudna) ஆகிய இரண்டு பெண்களுக்கு இவ்வாண்டிற்கான இரசாயனவியல் (வேதியியல்) பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு சார்ந்த ஆய்வுகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் கண்டுபிடித்துள்ள CRISPR / Cas9 மரபணு திருத்தக் கருவியைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணிய உயிரினங்களின் மரபணுக்களை மிக அதிக துல்லியத்துடன் மாற்ற முடியும்.
CRISPR / Cas9 மரபணு திருத்தக் கருவிகள் மூலக்கூறு வாழ்க்கை விஞ்ஞானத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. தாவர இனப்பெருக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை அவை கொண்டு வந்துள்ளன. அவை புற்றுநோய் சிகிச்சைகளுக்கு பங்களிப்பு செய்வதுடன், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தும் கனவையும் நனவாக்கும் என நம்பப்படுகிறது.
இமானுவேல் சார்பென்டியர் பிரான்ஸ் நாட்டவர் என்பதுடன், ஜெனிஃபர் A. டவுட்னா அமெரிக்கவை சேர்ந்தவராவார்.
நாளை (8) இலக்கியத்திற்கும், 9 ஆம் திகதி அமைதிக்கான நோபல் பரிசும் 10 ஆம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.
04 Nov, 2022 | 11:55 AM
09 Oct, 2020 | 04:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS