கொரோனா தொடர்பில் போலி பிரசாரங்களை பரப்பியவர் கைது

கொரோனா தொடர்பில் போலி பிரசாரங்களை பரப்பிய ஒருவர் கைது 

by Staff Writer 06-10-2020 | 11:44 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று தொடர்பில் போலி பிரசாரங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய ஒருவர் வௌ்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், களுபோவில வைத்தியசாலை தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வௌ்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான சந்தேக நபர் நேற்றிரவு (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.