கம்பஹாவின் 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம்

கம்பஹாவின் 4 பொலிஸ் பிரிவுகளில் மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

by Bella Dalima 06-10-2020 | 3:58 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் 4 பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் பொது நிகழ்வுகளில் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.