English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
06 Oct, 2020 | 6:29 pm
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை நாட்டில் மீண்டும் அமுல்படுத்தினால் பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பஸ்களின் ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் போது அதிகக் கட்டணம் அறவிட வேண்டும் எனும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, தனியார் மற்றும் அரசாங்க பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும் போது பாரிய நட்டம் ஏற்படும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் 48 அல்லது 72 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே இந்த ஒழுங்கு விதிகளை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது போகும் பட்சத்தில், கலந்துரையாடல் ஊடாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
14 Jan, 2021 | 03:39 PM
24 Dec, 2020 | 02:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS