பாரிஸில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

பாரிஸில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

by Staff Writer 05-10-2020 | 3:04 PM
Colombo (News 1st) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை (06) முதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. பிரான்ஸில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பிரெஞ்ச் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக நாளை முதல் பாரிசிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. பிரான்ஸில் இதுவரையில் 32,230 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் 619,190 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.