மனு விசாரணை 04 ஆவது நாளாகவும் தொடர்கிறது

நான்காவது நாளாகவும் தொடரும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு விசாரணை

by Fazlullah Mubarak 05-10-2020 | 11:00 AM

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 39 மனுக்கள் இன்று (05) நான்காவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பரிசீலிக்கின்றது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களில் 37 மனுக்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தவே கடந்த வாரம் அனுமதி வழக்கப்பட்டிருந்தது. சிவில் பிரஜைகளால் தாக்கல் செய்யப்பட்ட 02 மனுக்கள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்தல் அனுப்பப்படாதமையால் அந்த இரண்டு மனுக்கள் குறித்தும் தெளிவுபடுத்தல்களை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.