தெஹிவளையில் இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது

by Staff Writer 05-10-2020 | 2:40 PM
Colombo (News 1st) தெஹிவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிக்கு 50,000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.