by Staff Writer 04-10-2020 | 10:35 AM
Colombo (News 1st) மொறட்டுவை - கட்டுபெத்த பகுதியில் கேரள கஞ்சாவுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (03) மாலை சுற்றிவைளப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 500 கிராம் கேரள கஞ்சாவுடன் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 134,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொறட்டுவை - லுனாவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான யுவதியே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொறட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மொறட்டுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.