by Staff Writer 04-10-2020 | 12:36 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை விடுமுறை காலம் நாளை (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள், தனியார் பிரத்தியேக வகுப்புகள் மற்றும் பிரிவேனாக்களை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது