by Staff Writer 03-10-2020 | 4:00 PM
Colombo (News 1st) 15 விமான நிலையங்களை ஒன்றிணைத்து தேசிய விமான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாட்டிலுள்ள பிரதான 05 விமான நிலையங்களுடன் 15 விமான நிலையங்களை ஒன்றிணைத்து சில விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக ஏனைய 15 விமான நிலையங்களையும் ஒன்றிணைத்து நாடு முழுவதிலும் உள்நாட்டு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க தெரிவித்தார்.
இதற்கு தேவையான வகையில், பிரதான விமான நிலையங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு 03 விமான நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.