சுற்றாடலை அழிப்பவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த அமரவீர

by Staff Writer 03-10-2020 | 7:12 PM
Colombo (News 1st) சுற்றாடலை அழிப்பவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சுற்றாடல் கட்டமைப்பை மேம்படுத்தி, நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் எதிர்பார்ப்பு என மஹிந்த அமரவீர கூறினார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் இதன்போது அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. இதேவேளை, மட்டக்களப்பிற்கு சென்றிருந்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவை, இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சந்தித்தார்.