இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

காணாமற்போன மீனவரை கண்டுபிடிக்கும் வரை இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

by Staff Writer 03-10-2020 | 6:29 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் காணாமற்போன மீனவரை கண்டுபிடிக்கும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். இராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் (01) கடற்றொழிலுக்கு மீனவர்கள் சென்றிருந்த போது ஒருவர் படகிலிருந்து தவறி வீழ்ந்து காணாமற்போயுள்ளார். காணாமற்போன மீனவரை அவருடன் சென்ற மீனவர்கள் தேடியும் கிடைக்காத நிலையில், அவர்கள் நேற்று இரவு கரை திரும்பினர். இந்த நிலையில், கடலின் நீரோட்டம் நெடுந்தீவுப் பகுதியை நோக்கி செல்வதால் இலங்கை கடல் பகுதிக்குள் மீனவரை தேடிச்செல்ல மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவரைக் கண்டுபிடிக்கும் வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.