ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் பேராயர் கருத்து

by Staff Writer 03-10-2020 | 9:11 PM
Colombo (News 1st) கொழும்பு பேராயர் பேரருட்திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். தாக்குதலுடன் தொடர்புடைய நபருடன் கலந்துரையாடல் நடத்தியதாகக் கூறப்பட்ட நபர் திடீரென விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பேராயர் அதிருப்தி வௌியிட்டார்.