இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா கைப்பற்றல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா மூட்டைகள் தமிழ் நாட்டில் கைப்பற்றப்பட்டன

by Staff Writer 03-10-2020 | 6:56 PM
Colombo (News 1st) தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா மூட்டைகள் Q-பிரிவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை - வெளிவயல் கடற்பகுதியில் கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்தவிருப்பதாக Q-பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, தஞ்சாவூர் Q-பிரிவு பொலிஸார் இன்று அதிகாலை 2 மணி அளவில் வெளிவயல் கடற்பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். இதன்போது, 3 பேர் படகுகளில் கஞ்சா மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த படகில் ஏற்றப்பட்ட 170 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகளையும் படகையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.