அத்துமீறிய காடழிப்பிற்கு எதிராக கொழும்பில் போராட்டம்

by Staff Writer 03-10-2020 | 8:09 PM
Colombo (News 1st) அத்துமீறிய காடழிப்பை எதிர்ப்போம் எனும் தொனிப்பொருளில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடல் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி விகாரமகாதேவி பூங்கா பகுதியில் பதாகைகளை ஏந்திய வண்ணம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சுற்றாடலை பாதுகாப்போம் ஒன்றிணைந்த அமைப்பு இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.