ஷானி அபேசேகரவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஷானி அபேசேகரவிற்கு 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 02-10-2020 | 5:00 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்களுக்கு எதிராக பொய்யான சாட்சியங்களை உருவாக்கி நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரோஹன மென்டிஸ் மற்றும் ஓய்வுபெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.டி. நவரத்ன பிரேமதிலக்க ஆகியோரே வழக்கின் ஏனைய சந்தேகநபர்களாவர்