வெட்டப்பட்ட கைகளை மீண்டும் பொருத்தி யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை

by Staff Writer 02-10-2020 | 7:29 PM
Colombo (News 1st) இரண்டு கைகளும் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மேற்கொண்டு மீண்டும் கைகளைப் பொருத்தி யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி - விசுவமடுவை சேர்ந்த மதுரை வீரன் காந்தராஜ் எனும் 40 வயதானவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி இரண்டு கைகளும் வெட்டப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சியிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வைத்திய நிபுணர் டொக்டர் இளஞ்செழியன் பல்லவன் 9 மணித்தியாலங்களாக பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில் ஈடுபட்டு இந்த சாதனையைப் படைத்துள்ளார். நரம்புகள், இரத்த நாளங்கள் அனைத்தும் சீராகப் பொருந்திய நிலையில், ம.காந்தராஜ் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 2 மாதங்கள் வரை செல்லலாம் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்