நாட்டிற்கு கல்வி சீர்திருத்தம் தேவை

நாட்டிற்கு கல்வி சீர்திருத்தம் தேவை: பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 02-10-2020 | 7:48 PM
Colombo (News 1st) நாட்டிற்கு கல்வி சீர்திருத்தம் தேவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார். சிறுவர் தின தேசிய நிகழ்வு பத்தரமுல்லை 'அபே கம' வளாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. 'எமது நாடு எமது கரங்களில்' எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிறுவர் தினத்தை முன்னிட்டு நினைவு முத்திரையொன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.